விநாயகர் பரிசுப்போட்டி
விநாயகனே விநாயகனே நம்பி வரும் பக்தர்களுக்கு அருள் புரிபவனே ஆனை முகத்தானே
விநாயகனே விநாயகனே
நம்பி வரும் பக்தர்களுக்கு
அருள் புரிபவனே
ஆனை முகத்தானே
அகிலத்தின் அனைத்தையும் அறிந்தவனே
அப்பா-அம்மா தான்
உலகமென ஊருக்கே -உன்
செயலால் நிரூபித்த
முழு முதற் கடவுளே
உன் தும்பிக்கையில் உள்ளதய்யா
எங்கள் நம்பிக்கை
முச்சந்தியிலும் இருந்தாலும் ,
கோபுரத்தில் இருந்தாலும்
எளியோர் வலி உணர்ந்து காப்பவனே
அப்பனுக்கும் அறிவுரை கூறிய
ஆசானே
ஈசனே உன்னிடத்தில் கற்க
கடலளவு உள்ளதய்யா
நாயகா
வேறு யாருய்யா ?
நீயே என் விநாயகா!
-லி.நௌஷாத் கான்-
கும்பகோணம்