Vinayagar Kavithai
ஆடல் வல்லானின் தலை மகனே / அன்னையின் அன்பைப் பெற்ற முதல்வனே / பரமனின் பிள்ளை பாருக்கும் பிள்ளையே / பிரணவ மந்திரத்தின் பொருளே கணபதியே /

+++++++++++++++++++++++++++
தலைப்பு : விநாயகர்….
+++++++++++++++++++++++++++
ஆடல் வல்லானின் தலை
மகனே /
அன்னையின் அன்பைப்
பெற்ற முதல்வனே /
பரமனின் பிள்ளை பாருக்கும் பிள்ளையே /
பிரணவ மந்திரத்தின்
பொருளே கணபதியே /
ஞானக் கடவுளே தகப்பன்
சாமியே /
ஆனை முகத்தோனே
அருகம்புல் ஆண்டவனே /
கந்தனுக்கு மூத்தோனே
கலியுக நாயகனே /
இல்லங்களின் இன்னல்களை
இல்லாது ஆக்குபவனே /
கருணையின் நாயகனே
கவலையைத் தீர்ப்பவனே /
கற்பகத் தருவாய்க் கனகம் பொழிபவனே /
பெருமான் முகமே யானை
முகம்தானே /
மூஷிக வாகனனே மோதக
விரும்பியே /
பார்க்கப் பார்க்கச் சலிக்கா
முகம்தானே /
உன்னை சரணடைகிறேன்
காத்தருள்வாய் அய்யனே /
என்றும் அன்புடன்
சே.நா.அசோகன் / சேலம்
Mobile :9384262908
@@@@@@